ஒரு பெண்ணின் ஏக்கம்!!


கவிதை 

ஒரு பெண்ணின் ஏக்கம் 

                      ~கவிஞர் செந்தமிழ்தாசன்




எனக்கே தெரியாம 

  எனக்குள்ள வந்தவனே

கணக்கே தெரியாம 

  கனவில் முத்தம் தந்தவனே!


ஏரெடுத்து நீ பாத்தா 

  ஏஇரத்தம் நுரைக்குதடா !

என்நரம்பே என்னையின்று 

  கட்டிப் போட்டு எரிக்குதடா !


நான்கறைக்குள் மாட்டியே

   நாளுக்குநாள் சாகுறேனே

உன் அணைப்பில் நான்மாட்டி

  உயிர்போக மாட்டேனா?


ஆசையோடு உன்னநான்

   அணைத்துக்கொண்டே இருக்கனும்

மீசைமுடி கொண்டுநீ - என் 

  மேனியெல்லாம் கிழிக்கனும்.


கூண்டுக்கிளியாய் இருந்தயென்ன 

  கவ்விக்கொண்ட பூனைநீ! 

சாகடித்தாலும் பரவாயில்லை,

  கூட்டிப்போ என்னை நீ.


என்றும் எழுத்தாணி முனையில் 

        "கவிஞர் செந்தமிழ்தாசன்"







 

Previous
Next Post »