கவிதை
ஒரு பெண்ணின் ஏக்கம்
~கவிஞர் செந்தமிழ்தாசன்
எனக்கே தெரியாம
எனக்குள்ள வந்தவனே
கணக்கே தெரியாம
கனவில் முத்தம் தந்தவனே!
ஏரெடுத்து நீ பாத்தா
ஏஇரத்தம் நுரைக்குதடா !
என்நரம்பே என்னையின்று
கட்டிப் போட்டு எரிக்குதடா !
நான்கறைக்குள் மாட்டியே
நாளுக்குநாள் சாகுறேனே
உன் அணைப்பில் நான்மாட்டி
உயிர்போக மாட்டேனா?
ஆசையோடு உன்னநான்
அணைத்துக்கொண்டே இருக்கனும்
மீசைமுடி கொண்டுநீ - என்
மேனியெல்லாம் கிழிக்கனும்.
கூண்டுக்கிளியாய் இருந்தயென்ன
கவ்விக்கொண்ட பூனைநீ!
சாகடித்தாலும் பரவாயில்லை,
கூட்டிப்போ என்னை நீ.
என்றும் எழுத்தாணி முனையில்
"கவிஞர் செந்தமிழ்தாசன்"
ConversionConversion EmoticonEmoticon